Tuesday, August 5, 2014

கிறிஸ்துராஜா பள்ளி
கடந்த ஒரு வாரமாக தோட்டத்தை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருகின்றது. பல துறை நண்பர்களிடம் இருந்து உதவிகள், சில இயற்கை ஆர்வலர்களின் அறிவுரைகள் என நாளும் பொழுதும் தோட்டத்தை சொழுமையாக்க உதவியாக இருக்கின்றது. தோட்டக்கலை சார்ந்த தேடலில் ஓர் செய்தி கிடைத்தது; புதிய தரிசனம் கணேசன் அவர்கள் பாளை கிறிஸ்து ராஜா பள்ளியில் அரை நாள் இலவச பயிற்சி (ஆகஸ்டு 3, 2014) நடத்த திட்டமிட்டுள்ளதாக.

இயற்கை விவசாயி இராஜபாண்டி, இயற்கை வேளாண் ஆலோசகர் ரைசா என வழக்கமான பட்டாளத்துடன் கிறிஸ்து ராஜா பள்ளிக்கு சொன்றோம். மதுரையில் இருந்து இன்னாசிமுத்து அவர்கள் வகுப்பு எடுக்க வந்திருந்தார்.

தோட்டக்கலை என்றவுடன் நாலு கீரை, இரண்டு காய்கறி செடி என முழு பாடத்தையும் பள்ளிகூட ஆசிரியர் போல ஒப்பிக்காமல், மக்களின் மனமறிந்து, இடை இடையே பல எடுத்துக்காட்டுகளோடு, நடைமுறை சிக்கல்களையும் விளக்கி அழகாக வகுப்பை கொண்டு சென்றார். இரண்டு மணி நேரமும் கூட்டத்தில் ஒருவர் கூட இருக்கையை விட்டு எழவில்லை! அவ்வளவு அழகாக வீட்டுத்தோட்டத்தின் அவசியம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.


கைதட்டு

வகுப்பின் முடிவில் – வகுப்பு என்று சொல்வதைவிட கலந்துரையாடல் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்! கலந்துரையாடலின் முடிவில் கூட்டத்திற்கு வருகை தந்தோரின் அறிமுகம் நடைப்பெற்றது. ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்க… இயற்கை விவசாயம் செய்வதாக இராஜபாண்டி சொல்லும்போது கூட்டத்தில் சிலர் கைதட்டி வரவேற்றது இயற்கையின் மீது மக்கள் கொண்டுள்ள காதலை வெளிக்காட்டியது. 
மண் புழு உரம்
தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அசைவ சமையல் குறிப்பு என்று நினைத்துவிடாதீர்கள். காய்கறிகள் சுவையாக இருக்க பயிர் வளர்ப்பில் மண் புழு முக்கியம். பயிரோடு சேர்த்து மண் புழுக்களையும் வளர்ப்பதால் மண்ணில் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். பல்லுயிர் பெருக்கம் மண்ணிற்கு வளம் சேர்ப்பதோடு, நல்ல விளைச்சலையும் கொடுக்கும்.

பயிர்களின் வேகமான வளர்ச்சிக்கும் சுவையான விளைச்சலுக்கும் இயற்கை உரங்களே சிறந்தது. உழவனின் நண்பன் என்று மண் புழுவை சொல்வதை விட உண்மையான உழவனே மண் புழுதான்! ஒவ்வொரு நாளும் பலமுறை நிலத்திற்கு மேல் வந்து பின் மீண்டும் நிலத்தின் ஆழத்திற்கு செல்கிறது. இப்படி பல முறை நிலத்தை உழுவதால் இவற்றை உழவனின் நண்பன் என்று சொல்வதைவிட உழவன் என்றே சொல்லலாம். இவ்வாறு உழுவதால் ஏற்படும் மெல்லிய துளையின் மூலம் பயிர்களின் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. மண்புழுவின் எச்சம் நல்ல உரமும் கூட.

இயற்கை விவசாயம்
உரத் தொட்டி
ஒவ்வொரு தோட்டத்திலும் மண் புழு உரம் தயாரிப்புக்கென்றே ஒரு இடம் ஒதுக்கினால் உரத்திற்காக ஆகும் செலவில் பெரும் பகுதியை மிச்சப்படுத்தலாம். மண்புழு உரம் தயாரிப்பு எளிமையானது மற்றும் நடைமுறை சிக்கல் இல்லாததும் கூட! வீட்டில் அல்லது தோட்டதில் மாடு வளர்ப்பவர் என்றால் ஏறத்தாழ செலவே இல்லை என்றுகூட சொல்லலாம். அவ்வளவு சிக்கனமானது மண்புழு உரம்!

மண் புழு உரம் தயாரிப்பிற்கு முன் மண் புழுவை பற்றி தெரிந்து கொள்வோம். 2000-க்கும் மேற்பட்ட மண் புழுக்கள் உலகில் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தட்பவெட்பம், நிலத்தடி நீர் மற்றும் மண்புழுவிற்கு கிடைக்கும் உணவு ஆகியவற்றின் அடிப்படையில் மண்ணுக்கு அடியில் சராசரியாக 3 ஆண்டுகள் வாழும் தன்மையுடையது. மண் புழுவின் எண்ணிக்கையை வைத்தே ஒரு மண் வளமாக இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்!

மண்புழு உரம் தயாரிப்பு:

ஒரு அடி அல்லது இரண்டடி உயரமுள்ள தொட்டி போதுமானது. சிலர் ஞெகிழி (பிளாஸ்டிக்) கொண்டு தொட்டு போன்ற அமைப்பை உருவாக்கலாம் என்று சொல்கிறார்கள். ஞெகிழி (பிளாஸ்டிக்) வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது. ஆகவே இதை தவிர்ப்பது நல்லது. கூடுமான வரை வெப்பத்தை உள்ளிழுக்காத வகையில் தொட்டி அமைப்பது நல்லது. தொட்டியின் உள்ளே செம்மண்னால் பரப்பி கொள்ளுங்கள். அதற்கு மேல் காய்கறி கழிவுகளையும் காய்ந்த இலைகளையும் பரப்பி கொள்ளுங்கள். இக்கலவையின் மேல் மாட்டு சாணத்தை கொட்ட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு மண் புழுக்களை மாட்டு சாணத்தின் மேல் விட வேண்டும். கோழி விரும்பி உண்ணும் உணவில் மண் புழுவிற்கு முதலிடம் உண்டு. எனவே கோழி அல்லது பறவைகள் அதிகம் இருக்கும் இடம் என்றால், மண் புழுவை தொட்டிக்கு மாற்றிய பிறகு தொட்டியை சுற்றி கம்பு நட்டு கோழி வலையால் வேலி போல் அமைத்து கொள்ளுங்கள். இதனால் கோழி உள்ளே வரவது தடுக்கப்படும்.


மண் புழு உரம்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு மாத காலத்தில் இலைகள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு மண் புழு வெளியேற்றும் கழிவுகள் உரங்களாக மேற்பரப்பில் படியும். அடர் பழுப்பு நிறத்தில், குருணை போண்று இருக்கும் மக்கிய நிலையே உரம். 

துளையிடும் மண்புழு
பொதுவாக மண் புழுக்கள் அது வாழும் பரப்பை துளையிட்டு உள் செல்லும் பழக்கம் உடையாதாக இருந்தாலும், அடிக்கடி மேல்புறத்திற்கு வந்து தனக்கு தேவையான காற்றை சுவாசிக்கும். மேலும், கழிவுகளை (உரத்தை) மேற்பரப்பில் விட்டுவிட்டு மீண்டும் துளையிட்டு கீழ் நோக்கி செல்லும் பழக்கம் உடையவை. எனவே பரப்பின் மேல் இருந்து நாம் எளிமையாக உரத்தை எடுத்து கொள்ளலாம். மேல் இருந்து எடுக்க எடுக்க மண் புழுவானது கீழ் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். செம்மண் பகுதியை அடைந்தவுடன் மீண்டும் மாட்டு சாணம், காய்கறிகள் மற்றும் மக்கிய இலைதலைகளால் நிரப்பி அடுத்த சுழற்சிக்கு தயாராகலாம்.

இத்தனை நாட்கள் காத்திருக்க முடியாது, உடனே மண் புழு உரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நியாயமான விலையில் அதிகமான மண் புழு உரத்தை அள்ளி செல்லுங்கள்!

தொடர்புக்கு:

தேவர்பிரான் கிருட்டினன்
ரைசா தாவூத்
78670 86806
78670 86803

Wednesday, July 30, 2014

Organic vegetables, Organic products
இயற்கை விவசாயம்


திருநெல்வேலியில் புறநகர் பகுதியான காமாட்சி நகரில் இயற்கை வேளான் விளை பொருள் விற்பனை பிரிவு தொடங்கப்பட்டது. இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய் ஒரு கிலோ உரூபாய் 15 என்று விற்கப்பட்டது. 
Organic products in tirunelveli
இயற்கை விவசாய காய்கறி விற்பனை மையம்

Monday, July 21, 2014

இயற்கை வேளாண் விளை பொருள் விழிப்புணர்வு துண்டறிக்கை. திருநெல்வேலி மகாராசநகர் பகுதியில் கொடுக்கப்பட்டது.


இயற்கை வேளாண் விளை பொருள்
விழிப்புணர்வு துண்டறிக்கை

இயற்கை வேளாண் விளை பொருள்
விழிப்புணர்வு துண்டறிக்கை - பின்புறம்


Tuesday, July 8, 2014

There are lots and lots of  inquiries  within short span of time! Everyone who happened to read our pamphlets are asking questions like "Are you going to start organic farming?", "Where is your organic products shop?", "How to find out whether a vegetable is organic or conventional?". 

Green Garden Address


There are bit more than these questions! I would recommend you one thing, please keep on reading this blog regularly. One can find answers for all the questions. Our Address:


Green Garden,
41. 8-th Cross Street,
3rd Main Road,
(Opp to KTC Depot),
Kamatchi Nagar,
Tirunelveli - 627 011
Mobile: 99620 64665







Monday, July 7, 2014


Almost all the pioneers in any industry are having a branch in India. Earning is so easy now days. We can earn in lakhs and lakhs by taking a position in any of these MNC. 
multi national company logo
Multi Nation Companies
Globalization has changed not only our work profile but also many things. We can buy Australian apples and oranges here. We know how to make Italian coffee. Young India knows what should be the future scope for engineering in world market. But don’t know who is producing the rice for us; don’t know what our farmers are eating; don’t know banned chemical fertilizers are still using in India and don’t know these are the reasons for our costly diseases!

We know majority of Indians are directly and indirectly depend on agriculture as their primary source of income, but we don't know  at least one farmer commits suicide every hour in India! India is a land of contradiction but 13,754 farmers’ suicide in a year should certainly shocking news to everyone. 

Knowing all these things, what should one think if a group of youngsters resigned their jobs from an international organization and started a business? Especially when they start an agriculture business? And that too as a social enterprises?!?
Yes! We decided to start a social enterprise, which should mainly focus on women empowerment through agri and its related businesses!


Why agri?
We may have number of options to earn money; but agri is the only industry which gives food to the whole world! But we are not seeing this as a business. We are seeing this as a way to feed the society! Moreover, 42.95% of the rural female working population is involved as agricultural labour. So getting into agriculture is the short cut to work for the rural women. You may ask why we should work for rural women. The answer is because this is a social enterprise!

Sunday, June 15, 2014

The Green Garden is a farm run by a set of youngsters who worked previously in a volunteering company in its environment project. With an ambition to promote health, nutrition and environment, the green garden has a long way to go.

Organic Vegetable


I have been in to organic farming since 2002 as soon as I finished my graduation in engineering. For me organic farming was very interesting . I was able to see the good things in it but then it was not easy. I was challenged in many ways by different people and things. The struggle continued till 2010 when I decided to move in to jobs. my first job was an environmental project which was ran by an UK based Indian company. I felt I was in a job where you get paid for serving farmers to go organic and I was able to see many scope in it. But at one point, started realising that there is definitely scope for improvement but, not through the company. Because its a profit making company and not an NGO!

I expressed my thoughts to my two team mates at workplace and they said," Let's move together in to your farm and work hard to create a set-up that could sustain ourselves at the same time provide opportunity to serve the farming community". One of my best moments!

Back at home, my friend and  former colleague Swathi welcomed my thoughts and we became, from a team of 3, to a team of 5 as her husband, Johnson also joined us. Also one of my former volunteer and good friend, Jo, encouraged me further to contribute. Finally, we quit the job in May 2014 and came back to my home town, Tirunelveli.

In May 2014, we started looking for species of birds, plants and native cows to grow in our farm. We went to Manapparai to buy our native kangeyam cow. would like to name it. Any suggestion?
Also bought a pair of katchakatti black sheep from Vadipatti  which is a fast declining species in Tamilnadu. We bought native country chicks of varying breeds like Aseel, Kadaknath, eurasian, dwarf breeds.

We procured about 485 native seedlings from a nursery ran by a women self-help group. We also bought various herbal seedlings too.

It was at this stage, one of my good friend joined our team. It was his long time dream to contribute to a community project. We could feel our team strengthening up!

At the farm,  many things needed a fix. The vermi compost unit's roof had been blown away in the wind. We
needed a shelter for the chicks separately. There was a large invasion of Parthenium plants all over the farm.

Every day, Strange looks and funny comments pass by us.
            What is she trying to do?
             she thinks she can manage with farming?
             What a strange team?

Google+